திருச்சி: தவெக தலைவர் விஜயின் கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆவணங்கள்  வழக்கானது கரூர் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். அதுபோல புதிதாக அரசியல் கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜயும், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளதுடன், தனது கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம், ஆட்சியில் பங்கு என கூறி, மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தொகுதி வாரியாக மக்கள் சந்திப்பு நடத்தி வந்த விஜய், கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற  நிகழ்ச்சியில் போது திடீரென ஏற்பட் கூட்ட நெரிசலில் 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வந்த நிலையில். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி  சிபிஐ விசாரணை நடத்தி வருகிற்து. ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி மேற்பார்வையில் சிபிஐ அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடந்த அக்டோபர்   15 ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் வழக்கை விசாரித்து வந்த எஸ்ஐடி தரப்பு சார்பில் கரூர் ஜூடீசியல் மாஜேஸ்திரேட் நீதிமன்றம் 1-ல் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு ஆவணங்கள் அனைத்தும் திருச்சி நீதிமன்றத்திற்கு வியாழக்கிழமை முதல் மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ஆவணங்களை திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இனி இந்த வழக்கில் ஆவணங்கள் தொடர்பான வழக்கு திருச்சி நீதிமன்றம் மூலமாகவே நடைபெறும் என சிபிஐ அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.