சென்னை

திமுக நிர்வாகிகள் கருணாநிதி நினைவு நாணயத்தை போட்டி போட்டுக்கொண்டு வாங்குவதால் ஒரே நாளில் ரூ. 50 லட்சத்துக்கு விற்பனை ஆகி உள்ளது

தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவின் அடையாளமாக அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அமைச்ச்ர் ராஜ்நாத் சிங் கடந்த 18-ந்தேதி வெளியிட்டார். தி.மு.க. தலைமை நிலையமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒரு நாணயம் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்த நாணயங்க்ளை அமைச்சர்கள், எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள்  ஆகியோர் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். மேலும் தோழமை கட்சித் தலைவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் 500 நாணயங்கள் ரூ.50 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளன.

பண வசதி படைத்த நிர்வாகிகள் விலையை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். அதே வேளையில் சாதாரண தொண்டனால் நாணயத்தை வாங்க முடியாத நிலை உள்ளதால் கருணாநிதி நினைவு நாணயத்தை 100 ரூபாய் கொடுத்து வாங்க வழிவகை செய்ய வேண்டும்  எனதொண்டர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.