
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. புனித் ராஜ்குமாரின் நினைவிடம் அமைந்துள்ள கன்டீரவா ஸ்டூடியோவுக்கு கடந்த 16 நாட்களாக ரசிகர்கள் அஞ்சலி செலுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கன்னட திரைப்பட வர்த்தக சபை சார்பில் புகழஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, புனித்துக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என அறிவித்தார்.
அந்த நிகழ்வில் பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையா, புனித் ராஜ்குமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
[youtube-feed feed=1]