டெல்லி
இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், எரிசக்தி துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.
சித்தராமையாஅப்போது விவசாயம், நீர்வளம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்தார். கர்நாடக மாநிலத்திற்கு 2023-24 ல் ரூ.5,600 கோடியாக இருந்த குறுகிய கால விவசாயக் கடன் வரம்பை ‘நபார்டு’ வங்கி 2024-25ல் ரூ.2,340 கோடியாக குறைத்துள்ளதாகவும், இதனை உயர்த்தி வழங்குவதற்கு நிதித்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் ஜல் சக்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் இரண்டு முக்கியமான நீர் திட்டங்களான மேகதாது மற்றும் கலசபந்தூரி திட்டம் ஆகியவற்றை விரைவுபடுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்தராமையா கோரிக்கை விடுத்தார்.
இவற்றை தவிர கர்நாடக மாநிலத்தில், வளர்ந்து வரும் 13 மாநகராட்சிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.10,000 கோடியும், மத்திய கர்நாடகாவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு நீர்ப்பாசனத்தை உறுதி செய்யும் மேல் பத்ரா திட்டத்திற்கு ரூ.5,300 கோடியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
[youtube-feed feed=1]