பெங்களூரு

ர்நாடக மாநிலத்தில் 7323 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் பருவமழை காலத்தில் ஏற்பட கூடிய நோய் தொற்றுகளை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது பற்றி முதல்வர் சித்தராமையா தலைமையில் கூட்டங்கள் நடத்தப்பட்டு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.

நேற்று முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம்,

“மாநிலத்தில் நடப்பு ஆண்டில் 7,362 பேருக்கு டெங்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

டெங்கு பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒவ்வொரு மருத்துவமனையிலும் தனியாக ஒரு வார்டுக்கு 10 படுக்கை வசதிகளை அமைக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

எப்போதெல்லாம் மழை பெய்யுமோ, அப்பேது டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த ஆண்டில் டெங்குவுக்கு 7 பேர் உயிரிழந்து உள்ளனர். குடிசைவாழ் மக்களுக்கு இலவச கொசு வலை வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது”

என்று கூறியுள்ளார்.