பெங்களுரு

ர்நாடக ஆளுநர் உத்தரவை எதிர்த்து கர்நாடக முதல்வர் சித்தராமையா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது மைசூருவில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய (மூடா) முறைகேடு விவகாரத்தில் வழக்கு தொடர கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளார்.

எனவே சித்தராமையாவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என்றாலும் தாம் எந்த தவறையும் செய்யவில்லை எனவும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் சித்தராமையா கூறி வந்தார்.

ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையா மனு தாக்கல் செய்து மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க நீதிபதியிடம் முறையிட்டனர்.

தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த மனு இன்று பிற்பகல் அல்லது நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தங்கவுடர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் சித்தராமையா சார்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோர் சித்தராமையா சார்பில் ஆஜராகி வாதாட உள்ளனர்..