பெங்களூரு
முன்னாள் கர்நாடக டிஜிபி ஓம்பிரகாஷ் கொலை வழக்கில் அவருடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஓம்பிரகாஷ் கர்நாடகாவில் டி.ஜி.பி.யாக பணியாற்றி இருந்தார். பிறகு, 2017-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்று விட்டார். 68 வயதாகும் ஓம்பிராஷ். பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் ஓம்பிரகாஷ் தனது மனைவி பல்லவியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இரு மாடிகள் கொட ஓம்பிரகாஷ் வீட்டின் தரை தளத்தில் ஓம்பிரகாஷ் தனது மனைவியுடன் வசித்து வந்தார். மேலும் முதல் மற்றும் 2-வது மாடியில் மகன் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக ஓம்பிரகாசுக்கும், அவரது மனைவி பல்லவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று மதியம் ஓம்பிரகாஷ், பல்லவி இடையே தகராறு ஏற்பட்டபோது ஆத்திரமடைந்த பல்லவி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவர் ஓம்பிரகாசை கண்மூடித்தனமாக குத்தியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பிறகு பல்லவி தனது கணவரை கொலை செய்து விட்டதாக கூறி, போலீசாரை செல்போனில் தொடர்பு கொண்டு பல்லவி தெரிவித்ததால் சம்பவ இடத்திற்கு எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் விரைந்து சென்றனர்.
வீட்டுக்கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டு பல்லவி இருந்துள்ளார், வீட்டுக்கதவை பல்லவி திறந்த பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது ஓம்பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.அலோக் மோகன் மற்றும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த், பிற அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினார்கள். முதற்கட்டமாக நடந்த விசாரணையில் ஓம்பிரகாசை, அவரது மனைவி பல்லவியே கத்தியால் குத்திக் கொன்றது தெரியவந்ததுதால்பல்லவி கைது செய்யப்பட்டார்.