வாஷிங்டன்

மெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகுவதால் கமலா ஹாரிசுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க உள்ளது.

வர்ய்ன் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19-ம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.

ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கினார். பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டதுடன் டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பேசுவதற்கு மிகவும் தடுமாறினார். மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை டிரம்ப் என்றும் தவறுதலாக கூறினார்.

இவை ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி அவர் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார் என்ற்ம் அவர் போட்டியிட வேண்டாம் என்றும் ஜனநாயக கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர்.  எனவே கமலா ஹாரிசை ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளாரக நியமிக்க ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் தனது எக்ஸ் வலைதளத்தில்,

“எனது சக ஜனநாயகக் கட்சியினரே, எனது வேட்புமனுவை ஏற்க வேண்டாம். எஞ்சியிருக்கும் எனது பதவிக் காலம் முழுவதும் அதிபராக எனது கடமைகளில் எனது முழு ஆற்றலையும் செலுத்த முடிவு செய்துள்ளேன்.

2020ல் கட்சி வேட்பாளராக எனது முதல் முடிவு கமலா ஹாரிசை துணைத் தலைவராக தேர்ந்தெடுத்ததுதான். இது நான் எடுத்த சிறந்த முடிவு. இந்த ஆண்டு எங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் வருவதற்கு எனது முழு ஆதரவையும், ஒப்புதலையும் வழங்க விரும்புகிறேன். ஜனநாயகவாதிகள் – ஒன்று கூடி டிரம்பை தோற்கடிக்க வேண்டிய நேரம் இது. இதை செய்வோம்”

என்று பதிவ்விட்டுள்ளார்