சென்னை: திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கலி.பூங்குன்றனார், தோழர் எழில் இளங்கோவன், கொளத்தூர் சின்னராசு ஆகிய 3 பேருக்கு இன்று ரூ.1 லட்சம்  நிதியுடன்  கருஞ்சட்டை விருது வழங்கப்படுகிறது.

இன்று மாலை  மாலை 6 மணிக்கு தியாகராயநகர் (தி.நகர்) ஜி.என்.சாலையில் உள்ள சர்.ப்பிடி.தியாகராயர் அரங்கில் “கருஞ்சட்டை விருது” வழங்கும் விழா  நடைபெறுகிறது.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 29 அன்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் திராவிட இயக்க வளர்ச்சிக்காக நீண்ட நாள்களாக செயல்பட்டு வரும் 3 மூத்த முன்னோடிகளுக்கு   “கருஞ்சட்டை விருதும்” ரூபாய் ஒரு லட்சம் நிதியும் வழங்கப்படுகிறது.  அதன்படி திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனாருக்கும்,  திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொருளாளரும், தலைசிறந்த பவுத்த அறிஞருமான தோழர் எழில் இளங்கோவனுக்கும், திராவிட முன்னேற்ற கழகத்தில் வெளியில் தெரியாத வேர் போலத் தொடக்க நாள் தொட்டு தொண்டாற்றி வருபவரும் மூத்த தொண்டருமான  கொளத்தூர் சின்னராசுவுக்கும் வழங்கப்படுகிறது.

விழாவில் கருஞ்சட்டை விருதுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குகிறார். விருதாளர்களுக்கான  ரூ.1லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிர மணியன் வழங்கி  பாராட்டி பேசுகின்றனர்.