சென்னை
திராவிடர் கழக தலைவர் கி வீரமணி அதிமுக மற்றும் பாஜகவை விமர்சித்துள்ளார்..

இன்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில்,
”அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பா.ஜனதா கூட்டணி அரசே தமிழ்நாட்டில் அமையும் என பகிரங்கமாய் பேசி வருகின்றனர். ஆனால், அ.தி.மு.க. தனித்து பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்போம் என கூறி வருகிறது.
இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டி ஒன்றில், தமிழ்நாட்டில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சிதான் அமையும். அதுவும் எங்கள் தலைமையில் தான் அமையும் என கூறியுள்ளார். இதற்கு அ.தி.மு.க. தலைமை என்ன சொல்லப்போகிறது?
கொள்கை உள்ள அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அளிக்கும் பதில் என்ன? தனி ஆட்சியா? கூட்டணி ஆட்சியா? என்பதில் இப்போதே குழப்பம் ஏற்பட்டுள்ளது”
என்று கூறப்பட்டுள்ளது.