சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி. கேசி பழனிச்சாமி   தொடர்ந்த அவதூறு வழக்கில், முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கான சலசலப்பு எழுந்த நிலையில்,   கோவையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்தித்தார். அப்போது, அதிமுக முன்னாள் எம்.பி. கேசி பழனிச்சாமி குறித்து விமர்சித்தார்.

இதை கண்டித்து, தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக கே.சி.பழனிசாமி கோவையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கோவை குற்றவியல் நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது. வழக்கின் விசாரணை மீண்டும் ஏப்ரல் 1ந்தேதி நடைபெற்றது. அப்போது,  கே.சி.பழனிசாமி சார்பில்  ஆஜரான வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜரானார்.

இதையடுத்து, அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி வரும் 15-ம் தேதி ஆஜராக வேண்டும் என கோவை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.