டெல்லி

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் 2004ல் நடந்தது போல இப்போதும் நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் அறிவிப்பதிபடி நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நேற்றைய 7-ம் கட்ட வாக்குப்பதிவுடன் நடந்து முடிந்தது.  பதிவான வாக்குகல் வரும் 4 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற ஆவல் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள், கருத்துக்கணிப்பில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை எடுத்தன. இந்த முடிவுகள் நேற்று மாலை 6 மணிக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிவடைந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகின.

அதன்படி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் பா.ஜனதா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளளிடம்,

”கடந்த 2004-ல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துத்துக்கணிப்புகள் அனைத்தும் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் ஆட்சியமைக்கும் எனச்சொன்னார்கள். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரலாறு திரும்பும்.இந்த கருத்துக்கணிப்பு ஒரு உளவியல் ரீதியான விளையாட்டு. ஜூன் 4-ல் இந்த எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும். இந்தியா கூட்டணி 295 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும்”

என்று கூறியுள்ளார்.