சென்னை: பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப் படும் என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் நடத்திய கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத் தொகை வழங்கும் நிகழ்ச்சியானது சென்னையிலுள்ள பத்திரிகையாளர் மன்ற தலைமையகத்தில் நேற்று (ஏப். 6) மாலை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கவுரவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசும்போது, முதல்வர் மு. க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும், பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10,000-லிருந்து ரூ.12,000-ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.