சீதாமார்கி

பீகாரின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தள கட்சி மகளிரணி தலைவரை அடித்து உதைத்து செருப்பு மாலை அணிவித்து இழுத்து சென்றுள்ளனர்.

பீகார் மாநில ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தள க்கட்சியை சேர்ந்த மாவட்ட மகளிரணி தலைவராக இருப்பவர் காமினி பட்டேல். ஆவார்  சீதாமார்ஹி மாவட்டத்தில் பைர்கனியா பகுதியில் அக்கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது., இதற்கு காமினியை அழைக்கவில்லை என்பதால், ஆத்திரமடைந்த காமினி பேஸ்புக்கில் அதுபற்றி பதிவிட்டு உள்ளார்.

மேலும் இந்தப்பதிவில் விமர்சனங்களை வெளியிட்ட சிலருக்கு எதிராக காரசார பதில் விமர்சனங்களும் வெளியிடப்பட்டன.   நேற்று காலை அக்கட்சியின் வார்டு கவுன்சிலர் சஞ்சய் சிங்கின் வீட்டுக்கு நேற்று காலை காமினி சென்று தகராறில் ஈடுபட்டு உள்ளார்., நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்காததுபற்றி சஞ்சயை நேரில் சந்தித்து கேட்டுள்ளதால்ல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

வாக்குவாத முடிவில் கவுன்சிலர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சேர்ந்து காமினியை அடித்து, உதைத்து அவரை திருடி என கூறி, அவருக்கு செருப்பு அணிவித்து கவுன்சிலரின் வீட்டுக்கு அருகே இருந்த தெருவில் காமினியை தரதரவென இழுத்து சென்றுள்ளனர்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.  வீடியோவில், காமினியின் முகம் வீங்கிய நிலையிலும், உடலில் காயங்களுடனும், கழுத்தில் செருப்புகளை அணிந்தபடியும் காணப்படுகிறார். அவரை சுயநினைவற்ற நிலையில் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். காவல்துறையினர் சஞ்சய் சிங்கை போலீசார் காவலுக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.