டெல்லி

த்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மரணம்டைந்தோர் உடல்கள் ஆர்ரில் வீசப்பட்டுள்ளதாக ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார்.’

தற்போது உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவை முன்னிட்டு கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். கடந்த மாதம் 29 ஆம் தேதி மவுனி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, திடீரென நெரிசல் ஏற்பட்டது.

நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக உத்தரப் பிரதேசம் மாநில அரசு தெரிவித்து., உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.  ஆனால்  உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை உத்தரப் பிரதேசம் மாநில அரசு மறைத்து வருவதாக ஏற்கனவே அகிலேஷ் யாதவ் குற்றம் காட்டி இருந்தார்.

இது குறித்து மாநிலங்களவை எம்.பி ஜெயா பச்சன் செய்தியாளர்களிடம்,

”மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் பல உடல்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளது . இதனால் தண்ணீர் மாசுபட்டு உள்ளது . அதிக மாசுபட்ட தண்ணீர் கும்பமேளாவில்தான் உள்ளது.   இது குறித்து யாரும் எந்த விளக்கமும் தரவில்லை.

ம்கா கும்பமேளாவுக்கு வரும் சாதாரண மக்களுக்கு எந்த ஒரு வசதியும் செய்து தரப்படவில்லை. கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடினர் என பொய் சொல்கிறார்கள். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மக்கள் எப்படி சிறிய இடத்தில் கூட முடியும்”

என்று கூறியுள்ளார்.