மராவதி

ந்திர மக்களின் முடிவ் தமக்கு ஆச்சரியமளிப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது.  அமராவதி நகரில் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

அப்போது ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம்,

“நான் இந்த மாதிரி முடிவுகள் வரும் என்று நான் நினைக்கவில்லை. ஆந்திர மக்கள் அளித்த முடிவுகள் ஆச்சரியமாகவும், எதிர்பார்காத வகையிலும் உள்ளது. நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றியும் 40% வாக்கைக் கூட பெற முடியவில்லை.

எனவே இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு மீண்டும் எழுவோம், எங்களுக்கு எதிர்க் கட்சியாக இருப்பது புதியது அல்ல. நான் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள கட்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். எப்போதும் குரலற்றவர்களின் குரலாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி செயல்படும்”

என்று கூறினார்.