முசிறி

முசிறி ருகே உள்ள அதிமுக நிர்வாகி இ:ள்க்கோவனுக்கு சொந்தமான கல்லூரிகளில் வருமானவரி சோதனை நடைபெறுவதை அவர் மறுத்துளார்.

அ.தி.மு.க. நிர்வாகி இளங்கோவனுக்கு சொந்தமான திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஜம்முநாதபுரம் பகுதியில் உள்ள எம்.ஐ.டி. வேளாண் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மகளிர் கல்லூரிகளில் வருமான வரித் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.  ஏற்கனவே இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய்க்கு சொத்துகளை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு இளங்கோவன் நெருங்கிய நண்பர் ஆவார். இளங்கோவ்ன் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தமிழக மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்து தற்போது சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க.,செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

அதிமுக நிவாகி இளங்கொவை,

“எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை. கல்லூரியில் கடந்த 3 நாட்களாக வருடாந்திர கணக்கு தணிக்கை மட்டுமே நடைபெறுகிறது”

என்று தெரிவித்துள்ளார்.