அபுதாபி: 
பிஎல்லில் இன்று இரண்டு போட்டியில் நடைபெற்றது.

அபுதாபியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் டெல்லி அணியும், ஷார்ஜாவில் நடந்த பஞ்சாப் கிங்க்ஸ் – சன்ரைஸ்ர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் வெற்றி பெற்றன.

அபுதாபியில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

இன்று நடைபெற்ற 36வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து

முதலில் பேட் செய்த டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷ்ரேயஸ் ஐயர் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் 121 ரன்களை எடுத்த ராஜஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக  கேப்டன் சஞ்சு சாம்சன் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல் அணி 16  புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

பஞ்சாப் கிங்க்ஸ்-  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்க்ஸ் அணி,  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஐபிஎல் தொடரில் நாளை இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. 

நாளை இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. 

நாளை இந்திய நேரப்படி மதியம் 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ  – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.