மும்பை’

காராஷ்டிர அரசு ஹோமியோபதி மருத்துவர்களுக்கு அலோபதி சிகிச்சை அளிக்க அனுமதி அளித்ததர்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மகா​ராஷ்டிர மருத்​துவ கவுன்​சில் சட்​டத்​தில் கடந்த 2014-ம் ஆண்​டில்  மேற்​கொள்​ளப்​பட்​ட திருத்​தங்​களின்​படி மருந்​தி​யல் சான்​றிதழ் படிப்பை நிறைவு செய்த ஆயுர்​வேத, சித்த, ஹோமியோபதி மருத்​து​வர்​கள், அலோபதி சிகிச்சை அளிக்​கலாம், அலோபதி மருந்​துகளை பரிந்​துரைக்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டது.

இந்​திய மருத்​து​வர்​கள் சங்​கம் (ஐஎம்ஏ) சார்​பில் இதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுகடந்த 2015-ம் ஆண்​டில் இந்த வழக்கை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. மகா​ராஷ்டிர சுகா​தார அறி​வியல் பல்​கலைக்​கழகம் சார்​பில் கடந்த 2016-ம் ஆண்​டில் சிசிஎம்பி என்ற மருந்​தி​யல் படிப்பு தொடங்​கப்​பட்​டது.

மகா​ராஷ்டிர மருத்​துவ கவுன்​சில் கடந்த ஜூன் 30-ம் தேதி ஓர் வெளி​யிட்ட​ அரச்சாணையில்,

“நவீன மருந்​தி​யல் சான்​றிதழ் படிப்​பில் தேர்ச்சி பெற்ற ஹோமியோபதி மருத்​து​வர்​கள் மகா​ராஷ்டிர மருத்​துவ கவுன்​சிலில் முறைப்​படி பதிவு செய்​ய​லாம். அதன்​பிறகு அவர்​கள் அலோபதி சிகிச்சை அளிக்​கலாம். அலோபதி மருந்​துகளை பரிந்​துரை செய்​ய​லாம்’’

என்று அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

ஹோமியோபதி மருத்​து​வர்​கள் இதுகுறித்து ,

“பல்​வேறு எம்​பிபிஎஸ் மருத்​து​வர்​கள், தங்​கள் நோயாளி​களுக்கு சித்த, ஆயுர்​வேத, ஹோமியோபதி மருந்​துகளை பரிந்​துரை செய்​கின்​றனர். நாங்​கள் முறை​யாக மருந்​தி​யல் சான்​றிதழ் படிப்பை நிறைவு செய்​துள்​ளோம். எங்​கள் நோயாளி​களுக்கு தேவை​யான அலோபதி மருந்​துகளை பரிந்​துரை செய்ய எங்​களுக்கு உரிமை இருக்​கிறது. மகா​ராஷ்டிர அரசின் முடிவை முழு​மனதோடு வரவேற்​கிறோம்’’

என்று தெரி​வித்​தனர்.

மகா​ராஷ்டிர அரசின் அறி​விப்​பு குறித்து இந்​திய மருத்​து​வர்​கள் சங்​கம் மகா​ராஷ்டிர ஐஎம்ஏ தலை​வர் சந்​தோஷ்,

“மகா​ராஷ்டி​ரா​வின் மூத்த அரசி​யல் தலை​வர்​கள், பல்​வேறு ஹோமியோபதி மருத்​து​வக் கல்​லூரி​களை நடத்​துகின்​றனர். அவர்​களின் அழுத்​தத்​தால் மகா​ராஷ்டிர அரசு புதிய அரசாணையை வெளி​யிட்டு இருக்​கிறது. இந்த அரசாணையை எதிர்த்து சட்​டரீ​தி​யாக போராடு​வோம்’’

என்று தெரி​வித்துள்ளார்.