பாரிஸ்.

ன்றுடன் நிறைவடையும் பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியா 29 பதக்கங்களை வென்றுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17 ஆவது பாராஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்த தொடர் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைய உள்ளது.

இன்றைய கடைசி நாள் போட்டியில் இந்தியா தரப்பில் பூஜா இறுதி வீராங்கனையாக கனோயிங் போட்டியில் பங்கேற்றார்.  ஆனால் போட்டியின் அரையிறுதியில் பூஜா தோல்வியை தழுவினார்.

போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலில் பூஜா தகுதி பெறவில்லை.  எனவே இப்போட்டியுடன் நடப்பு பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் போட்டிகள் முடிவடைந்தன.

இந்த பாராஒலிம்பிக் போட்டியின் பதக்க பட்டியலில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என்று 29 பதக்கங்களுடன் 18-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.