டெல்லி

சிறையில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாளுக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரி இந்தியா கூட்டணி வரும் 30 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளது’

அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் பதின்ந்துள்ள வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்த் அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்த, சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பல்வேறு பிரிவுகளில் பதிவு செய்துள்ள்ள வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து வருகிறார்.

ஜூன் 20-ம் தேதி அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் இந்த ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. கெஜ்ரிவால் இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஜூலை 12-ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆயினும் சிபிஐ பதிவு செய்துள்ள ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ பதிவு செய்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறையில் அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படவில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

திகார் சிறை நிர்வாகம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் வருகிற 30-ந்தேதி இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. மேலும் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு உரிய சிகிச்சை தர வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.