கார்ட்டூம்
ஒரே வாரத்தில் சூடான் நாட்டில் 170 பேர் காலரா நோயால் உயிரிழந்துள்ளனர்/

தற்போது சூடானில் பரவிய புதிய காலரா தொற்று காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 170-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பெரும்பாலான நோய்த் தொற்று பாதிப்புகள் தலைநகரான கார்ட்டூம் மற்றும் ஓம்டுர்மனில் பதிவாகியுள்ளன.
ஆயினும் வடக்கு கோர்டோபான், சென்னார், காசிரா, வெள்ளை நைல் மற்றும் நைல் நதி மாகாணங்களிலும் காலரா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து சூடானின் சுகாதார அமைசச்சர் ஹைதம் இப்ராஹிம்
“கடந்த நான்கு வாரங்களில் கார்ட்டூம் பகுதியில் சராசரியாக 600 முதல் 700 வரை காலரா நோய்த் தொற்று பதிவாகியுள்ளது”
என்று தெரிவித்துள்ளார்
Patrikai.com official YouTube Channel