சென்னை

டும் வெயில் கார்ணமாக முதியவர்க:ள் மற்றும் குழந்தைகள்

கடந்த பிப்ரவரி மாதம் முதலே தமிழகத்தில் வெயில் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்

“அடுத்த 3 நாட்களுக்கு அதாவது 25-ந்தேதி வரையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி அதிகமாக இருக்கக்கூடும். நேற்று 9 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.

கரூரில் 103.1 டிகிரி, மதுரை மற்றும் திருச்சியில் 102.3 டிகிரி, சேலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 102.2 டிகிரி, ஈரோடு 101.8 டிகிரி, வேலூர் 101.4 டிகிரி, தர்மபுரி மற்றும் திருத்தணியில் 100.4 டிகிரி என 9 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது”

என்று தெரிவித்துள்ளது.

வெயில் அதிகமாக காணப்படும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரையில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.