சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் தமிழ் சினிமான  நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். நடிகை அருணாவின் கணவர் தொழிலாளர் மோகன் குப்தா. இவர் வீடுகளில் உட்கட்டமைப்பு மற்றும் அலங்கரப்பணிகள் மேற்கொள்ளும்  நிறுவனத்தை நடத்தி வருகிறார்.   மேலும் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் நிலையில், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நடிகை அருணா  இயக்குநர் பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தின் முதல் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து கரிமேடு கருவாயன், முதல் மரியாதை உள்பட பல திரைப்படங்களில் அருணா நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் 1980ல் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

இவரது வீடு,  சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர், கேசினோ ட்ரைவ் பகுதியில்  உள்ளது. அங்கு இன்று காலை  கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சோதனை நடத்தி வருகின்றனர்.   காலை 7 மணியில் இருந்து  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.