ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை பள்ளி வகுப்பறை கட்டிடம்  மேற்கூரை இடிந்து விழுந்து   பலியான மாணவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் ஏராளமான மாணவர்கள காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர்.  ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் மனோகர் தானாவில் உள்ள பிப்லோடி அரசுப் பள்ளியில் காலை 8.30 மணியளவில் அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து அங்கு அமர்ந்திருந்த குழந்தைகள் மீது விழுந்துள்ளது.

இந்த விபத்தில்,  ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர சுமார் 40 குழந்தைகள் காயமடைந்த நிலையில், 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டட இடிபாடுகளில் சிக்கிய மாணவர்கள், ஆசிரியர்களை மீட்கும் பணியில் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டுள்ள விடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

இந்த இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு, பள்ளிக்கு வந்த அப்பகுதி கிராம மக்கள் கான்கிரீட் கற்களை அகற்றி மாணவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தபோது அங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்பட்டது.

மீட்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் பேரிடர் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தன. இடிந்து விழுந்தக் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், இது தொடர்பாக முன்னர் பல புகார்கள் எழுந்ததும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உள்ளூர்வாசிகள் புகாரளித்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் சிக்கிய 40-க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 பள்ளி திறந்து சிறிது நேரத்திலேயே பள்ளியின் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது. ம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீட்பு படையினர் ஆகியோரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணியில் 4 ஜே.சி.பி. எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தானில் அரசு பள்ளி இடிந்து விழுந்த விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பள்ளி கட்டிடம் விழுந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.