புதுச்சேரி

புதுச்சேரியில் தீபாவளிக்கு முதல் நாளான அக்டோபர் 30 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் வருகின்ற 31-ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்களின் வசதிக்காக தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1 ஆம் தேதி ஏற்கெனவே புதுச்சேர் அரசு விடுமுறை அளித்துள்ளது.

தற்போது தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30-ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது., கடைசி நேரக் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30 ஆம் தேதி புதன்கிழமையும் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

அன்ரு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொதுப் பணித் துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த, அக்டோபர் 30 ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் (16-ம்தேதி )சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.