நாகை:
கனமழை காரணமாக நாகையில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் அறிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தென் தமிழகம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது வருகிறது. கனமழை காரணமாக நாகையில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் அறிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel