புதுடெல்லி:
ர்நாடகத்தில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளில், சாதி, மத வேற்றுமையை வேரறுக்கும் வகையில் சீருடை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்து வதில் மாநில அரசுகள் மெத்தனம் காட்டியதால், நாளடைவில் தளர்வடைந்து, சாதி, மதங்களை பிரதிபலிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் ஆடை அணிந்து வரத் தொடங்கி உள்ளனர். இதனால், சில இடங்களில் பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கர்நாடக மாநில கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த அம்மாநில அரசின் உத்தரவிட்டது. இதையடுத்து, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர தடை விதிக்கப்பட்டது. இது சர்ச்சையானது.

இதையடுத்து மாநிலஅரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், “ஹிஜாப் இஸ்லாத்தின் அடிப்படையான விஷயம் அல்ல. சீருடை விவகாரத்தில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் கிடையாது.

சீருடை விவகாரங்களில் உரிய அறிவுறுத்தல்களை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது” என தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் சிலர் சார்பிலும், அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம் சார்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கர்நாடகத்தில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.