திருப்பதி

னி திருப்பதியில் லட்டு தயாரிக்க அனுப்படும் நெய் ஏற்றி வரும் வாகனங்களில் ஜி பி எஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்புகள், மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டதாக வெளி வந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இது ஆந்திர அரசியலில் புயலை கிளப்பியது.

பக்தர்கள் இதனால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக வேதனை அடைந்தனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இனி லட்டு தயாரிக்க கர்நாடக பால் கூட்டமைப்பின் பிரபல பிராண்டான நந்தினி நெய் பயன்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

கர்நாடக பால் கூட்டமைப்பு நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ்,

”இனி திருப்பதியி லட்டு பிரசாதம் தயாரிக்க நந்தினி பிராண்ட் நெய் உபபோகப்படுத்தப்பட உள்ளது.

நெய் கொண்டு செல்லும் வாகனங்கள் எங்கு நிற்கின்றன? எந்த வழியாக செல்கின்றன? என்பதை கண்டறிய வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

எந்த தருணத்திலும் கலப்படம் நடக்காமல் இருப்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்யும்.”

என்று தெரிவித்துள்ளார்.