சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி உபரிநீா் திறப்பு 1200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும்   என்றும், இதன் காரணமாக,   சென்னை உள்பட  கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து,  ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அதிகரிக்கப்பட்டுள்ளது.  சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி ஏற்கனவே முழுகொள்ளவை நெருங்கியுள்ள நிலையில், அதிலிருந்து  உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது,  சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருபதால்  உபரி நீர் திறப்பு  மேலும்,அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1200 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.   24 அடி உயரம் கொண்ட ஏரியின் நீர்மட்டம் 21.39 அடியாக உள்ளது. நீர் இருப்பு 3,645 மில்லியன் டன் அடியாக உள்ளது.  கனமழை   முன்னெச்சரிக்கையாக ஏரியில் இருந்து உபரிநீா் திறப்பு 1200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.