லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நெரிசல் சிக்கி பலியோனார் எண்ணிக்கை  121 ஆக உயர்ந்துள்ளது. சடலங்களை பார்த்து  30வயது போலீஸ்காரர் அதிர்ச்சியில் மரணமடைந்தது மேலும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து நடைபெற்ற இடத்தில்  உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 28 காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், “போலே பாபா’ என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான  பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிவடைந்ததும், மாலையில் மைதானத்தைவிட்டு மக்கள் கிளம்பும்போது கடும் நெரிசல் ஏற்பட்டது. மற்றொரு புறம், ஆன்மிக குருவான  “போலே பாபா’விடம் ஆசி பெறவும், அவரது காலடி மண்ணை சேகரிக்கவும் மக்கள் முண்டியடித்தனர். இதனால் எற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்த நிலையில், அவர்கள்மீது மற்றவர்கள் ஏறிச்சென்றது பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில்,  சிக்கி 110 பெண்கள், 11 குழந்தைகள் என 121  பேர் உயிரிழந்தனர். இவர்களில் 72 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மாநில தலைமைச் செயலர் மனோஜ் குமார் சிங் தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர் 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள்  உடல்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ள உடல்களை பார்த்து கதறி அழும் உறவினர்கள். DIN Published on: 03 ஜூலை 2024, 11:03 am Updated on: 03 ஜூலை 2024, 11:03 am 1 min read உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.

இதற்கிடையில்,  கூட்ட நெரிசலில் சிகிய உயிரிழந்வர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் குழுவில் காவலர் ரவி யாதவ் பணியமர்த்தப்பட்டிருந்தார். எட்டா மருத்துவக் கல்லூரியில் பணியிலிருந்த ரவி யாதவ், சடலங்கள் குவிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், திடீரென்று மயங்கி கீழே விழுந்ததாகவும் உடனிருந்த காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக ரவி யாதவுக்கு அதே மருத்துவமனையில் உயிர் காக்கும் சிசிச்சை அளிக்கப்பட்டும் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அலிகார் மாவட்டத்தை சேர்ந்த ரவி யாதவுக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அங்குள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், காயமடைந்தவர்களை மருத்துவமனையிலும், பலியானவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து பேசினார். பின்னர், அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இதுகுறித்து கூறிய பாஜக எம்எல்ஏவு அசிம் அருண், “இந்தச் சம்பவத்தில்  உயிரிழந்தவர்களில்  19 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றவர், விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி,   நிகழ்ச்சி முடிந்ததும், அமைப்பாளர்கள் சில முறைகேடுகள் செய்தார்கள், மக்களைத் தடுத்து நிறுத்தினர், இதனால் அவர்கள் முண்டியடித்து வெளியேற முயன்றனர். ஆனால்,   வெளியேறும் பாதை குறுகலாக இருந்தது, மேலும் பாதையில் பள்ளம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அதில் சிக்கி சிலர் கீழே விழா, அவர்கள்மீது மற்றவர்கள்   விழுந்து மூச்சுத் திணறி இறந்ததுள்ளனர். இது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.