கொழும்பு

லங்கை பிரதமராக ஹரிணி அமர்சூர்ய நியமிக்கப்பட்டுள்ளர்.

அண்மையில் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுர குமார திசநாயகே (வயது 56) வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றதையடுத்து புதிய அதிபர் தலைமையில் புதிய அரசு அமைவதற்கு வசதியாக பிரதமர் தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகியது.

இன்று அதிபர் திசநாயகே தலைமையில் 4 பேர் கொண்ட இடைக்கால மந்திரிசபை பதவியேற்றது.  இதில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமரசூரியா (வயது 54) பிரதமராக பதவியேற்றார். ,மேலும் நீதி, கல்வி, தொழிலாளர், தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடுகள் துறை அமைச்சரா;அகவும் பதவியேற்று இலங்கை வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை ஹரிணி பெற்றுள்ளார்.

அமைச்சர்களாக விஜிதா ஹெராத், லக்ஷ்மண் நிபுணராச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டு. பிரதமர் மற்றும் மந்திரிகளுக்கு அதிபர் திசநாயகே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.  அதிகாரிகள் வரும் நவம்பர் இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என கூறி உள்ளனர்.