கூடலூர்
காட்டு யானைகள் அணிவகுப்பால் கூடலூரில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

காட்டு யானைகள் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி எல்லமலை வனப் பகுதியில் பசும் புல்வெளிகளில் அணிவகுப்பு நடத்தி வருகின்றன. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பாடந்தொரை பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தின.
கடந்த மாதம் இறுதியில் தொழிலாளி ஒருவரை காட்டு யானை தாக்கி கொன்றதால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வனப்பகுதிக்குள் காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இதையொட்டி வனத்துறையினரும் டிரோன்கள் மூலம் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். , தற்போது எல்லமலை வனப் பகுதியில் பசும் புல்வெளிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக அணிவகுப்பு நடத்தி வருவதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.