டெல்லி:   மாநில அரசு இயற்றும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும்,  சூப்பர் முதல்வராக ஆளுநர் செயல்பட முடியாது  என்றும், மாநில நிர்வாகத்தின் மீது ஆளுநருக்கு ஆதிக்கம் செலுத்தும் பதவி இருக்க முடியாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைப்பது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும்  என காலக்கெடு தொடர்பான ஜனாதிபதி  முர்மு எழுப்பியுள்ள கேள்விகள்மீதுஉச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு  விசாரணை நடத்தி வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  கவர்னர் செயல்பாடுகளைச் செய்யவில்லை என்றால் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரமில்லாமல் இருக்க முடியுமா?  என மத்தியஅரசு வழக்கறிஞரிம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது மத்தியஅரசு ஆளுநருக்கு காலக்கெடுவை வழங்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று கூறியதுடன், இந்த விஷயத்தில்,   நாடாளுமன்றம் அரசியலமைப்பை திருத்த வேண்டும் அல்லது பிரச்சினை அரசியல் ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

இந்த வழக்கு நேற்று (ஆகஸ்டு 28ந்தேதிஸ்ரீ) மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

விசாரணைக்கு ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,  மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு ரிட் மனு தாக்கல் செய்ய முடியுமா? ஆளுநர், குடியரசுத் தலைவரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியுமா? என்பன போன்ற கேள்விகளை குடியரசுத் தலைவர் கேட்டுள்ளார்.  அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்சனைகளை வேறு வகையில்தான் தீர்வு காண முடியும்.

ஆளுநருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது. அதேபோலத்தான் உச்ச நீதிமன்றத்திலும் ஆளுநருக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்து உத்தரவு கோர முடியாது என்றார்.

இதையடுத்து பேசிய  நீதிபதிகள் ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி இல்லையா? என  கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் கூறிய துஷார் மேத்தா,  மாநில அமைச்சரவை ஆலோசனைப்படி ஆளுநர் செயல்படுகிறாரே தவிர, மத்திய அமைச்சரவையின் ஆலோசனைப்படி அல்ல. இருப்பினும், அவர் குடியரசுத் தலைவருக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர். உச்ச நீதிமன்றத்தில் பெரும்பாலான வழக்குகளில் ஆளுநர்களுக்காக மத்திய அரசே ஆஜராகி வாதிடுகிறது. மாநில அரசின் நிர்வாக அதிகாரங்கள் ஆளுநர்களிடம் உள்ளன. எனவே, ஆளுநர் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு மாநில அரசு ரிட் மனு மூலம் தீர்வு காண முடியாது என்றார்.

இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,  மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்குஅனுப்புவதாக இருந்தாலும் அமைச்சரவையின் ஆலோசனைப்படியே செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. ஆளுநர் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். அதேபோல, மாநில அரசை கட்டுப்படுத்தும் சூப்பர் முதல்வராகவும் ஆளுநர் இருக்க முடியாது. ஆளுநரும், முதல்வரும் இருமுனை கத்திகள் போல எதிர் எதிர் துருவங்களாக செயல்பட முடியாது என்றார்.

இதையடுத்து பேசிய  தலைமை நீதிபதி கவாய்,   மத்திய அரசின் சட்டத்துடன் முரண்படும் மசோதாவை மாநில அரசு மறுநிறைவேற்றம் செய்து அனுப்பினால், அதை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்ப முடியாதா? என்றார்.

இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்  சிங்வி, மறுநிறைவேற்றம் செய்யப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க முடியாது. மசோதாவை ஆளுநர் ஆராயவும் முடியாது. அது அவரது வேலை அல்ல. மாநில அரசு சரியான மசோதாவைத்தான் கொண்டு வரும். ஒருவேளை அது முரண்பட்டு இருந்தால், சரிசெய்ய நீதிமன்றங்கள் உள்ளன. அந்த மசோதா முரண்பாடாக இருக்கிறது என்றால் அதை முதல்முறையே குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்பலாம். இவ்வாறு வாதம் நடந்தது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் செப்.2-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைப்பது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும்! உச்ச நீதிமன்றம்

ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைப்பது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும்! உச்ச நீதிமன்றம்

அறுவை சிகிச்சை வெற்​றிகர​மாக முடிந்​தும், நோயாளி உயி​ரிழந்​தது போல உள்ளது! குடியரசு தலைவரின் கேள்வி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

ஆளுநர் நீண்ட காலமாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தால், என்ன வழி? சட்டத் துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி