சென்னை: தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பராம்பரிய தலமாக ஈரோடு மாவட்டம் நாகமலைக் குன்று காடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் நாகமலை குன்றினை மாநிலத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரிய தளமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பராம்பரிய தலமாகும்.
ஏற்கனவே மதுரை அரிட்டாபட்டி, திண்டுக்கல் காசம்பட்டி வீரா கோவில், ஈரோடு எலத்தூர் ஏரி பல்லுயிர் தலமாக உள்ளன. இதைத்தொடர்ந்து, 32.28 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நாகமலை குன்று நாலாவது பல்லுயிர் பராம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இங்குள்ள காட்டுப்பகுதியில் 135 வகை பறவைகள் உள்ளன. 138 தாவர இனங்கள், 106 பூச்சிகள், 17 ஊர்வனங்கள், 10 பாலூட்டிகள் என மொத்தம் 437 உயிரினங்கள் வாழ்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
