டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில்  இயக்கப்படும் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர  டோல் கட்டணம் வசூலிப்பதுகுறித்து மத்தியஅரசு பரிசீலித்து வருவதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர்   நிதின் கட்கரி கூறியுள்ளார்.

அதிகரித்து வரும் வாகன நெரிசலைக் குறைப்பதற்கும் பயணித்த சரியான தூரங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கும் GNSS அடிப்படையிலான சுங்க வசூல் முறைக்கான திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு வருவதாகவும், அதுபோல, தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர பாஸ்களை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக  கூறிய அமைச்சர் நிதின் கட்கரி, அதிக எடை கொண்ட லாரிகளுக்கு அபராதம் விதிப்பதும் தொழில்நுட்ப பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் நோக்கம் என்று தெரிவித்து உள்ளார்.

டெல்லியில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசியவர்,  நாடு முழுவதும் இருந்து டோல்கேட் மூலம்,  வருவாய் பெறப்பட்டு வருவதாக கூறியவர், இந்த வருவாயில் 74 சதவீதம் வர்த்தக வாகனங்களிடம் இருந்து பெறப்படு கிறது என்றும்,  தனியார் வாகனங்களின் பங்களிப்பு 26 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றார்.

இதனால்,  இதனால் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர டோல் பாஸ் வழங்குவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தனியார் வாகனங்களிடம் இருந்து பெறப்படும் டோல் வரி குறைவு என்பதால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படாது என்றவர்,  மேலும் பாஸ்டேக் வசதியுடன் குளோபல் நேவிகேஷன் செயற்கைகோள் (ஜிஎன்எஸ்எஸ்) அடிப்படையில் டோல் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்தவும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த முறை தற்போதைய டோல் கட்டண வரி வசூலிப்பை விட சிறப்பானதாக இருக்கும் என்றார்.

இந்த புதிய நடைமுறை, கர்நாடகாவில் பெங்களூரு – மைசூரு நெடுஞ்சாலை, ஹரியானாவில் பானிபட் – ஹிசார் நெடுங்சாலையில் கடந்தாண்டு ஜூலை மாதம்  சோதனை அடிப்படையில் இந்த முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தவர்,  இதன்மூலம்,   நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் சரியான தூரத்துக்கான கட்டணத்தை மட்டும் வசூலிப்பது, போக்குவரத்து நெரிசலை குறைப்பதுதான் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றார்.

கடந்த 2018-19-ம் ஆண்டில் டோல் பிளாசாக்களில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் 8 நிமிடங்களாக இருந்தது. பாஸ்டேக் அறிமுகம் மூலம் காத்திருப்பு நேரம் 47 வினாடிகளாக குறைந்தது. சில இடங்களில் மட்டும் பரபரப்பான நேரங்களில் இன்னும் தாமதம் ஏற்படுகிறது என்றவர்,  கிராம மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், இனி டோல் வரி வசூல் மையங்கள் கிராமங்களுக்கு வெளியே அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

[youtube-feed feed=1]