டெல்லி
இந்திய ரயில்வே 16 ஆண்டுகளுக்கு பிறகு சரக்கு ரயிலுக்கான சேவை கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

சரக்கு ரயில்களில் தொழிற்சாலை, குடோன்களில் இருந்து சரக்குகள் ஏற்ற, இறக்குவதற்காக நிறுத்தவும், ரெயிலை பாதை மாற்றுவதற்கும் ஒரு மணி நேர அடிப்படையில் என்ஜினுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தனியாரிடம் ரெயில்வே துறை வசூலித்து வருகிறது.
அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் இந்த கட்டணத்தை உயர்த்த உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ள சுற்றறிக்கை ரயில்வே வாரியத்திடம் இருந்து மண்டல ரயில்வே பொதுமேலாளர்களுக்கு கடந்த 14-ந்தேதி அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கட்டணம் 11 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சரக்கு ரெயில் ஒதுக்குதல் மற்றும் பாதை மாற்றுதல் கட்டணம் உயர்த்தப்பட்சு அதன் பின்னர் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதிகரிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது பயணிகளை நேரடியாக பாதிக்காது என்றாலும், சில பொருட்களில் அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரயில்வே கடந்த 1-ந்தேதி முதல் பயணிகள் கட்டணத்தை உயர்த்திய நிலையில், சரக்கு ரெயில் சேவையை பயன்படுத்துவதற்கான கட்டணத்தையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடதக்கதாகும்.