தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ், வெள்ளிக்கிழமை சிறப்பு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தால் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (DRI) மூன்று நாள் காவலில் வைக்கப்பட்டார்.

துபாயில் இருந்து 14.2 கிலோ தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் இந்த வார தொடக்கத்தில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.

இந்த தங்க கடத்தலுக்காக தனக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டதாக ரன்யா ராவ் கூறியுள்ள நிலையில் இதில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் குறித்து காவலில் எடுத்து விசாரிக்க டிஆர்ஐ கோரியிருந்தது.

இது தேச விரோத நடவடிக்கைகளுக்கான சாத்தியமான தொடர்பைக் குறிக்கிறது என்று அது கூறியது. நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, வழக்கில் மேலும் விசாரணை நடத்த அனுமதித்தது.