திருப்பதி:
வம்பர் 1- முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பதியில் நவ. 1ல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளது. சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாட்களில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் 15 ஆயிரம் டோக்கன்களும் வழங்கப்படும் என்றார்.

வைகுண்டம் காத்திருப்பு அறையில் இரவில் காத்திருக்கும் பக்தர்கள், காலையில் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் விஐபி தரிசன நேரம் மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.