தி.மு.க. தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி வீதியில் இழுத்துச் சென்ற முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தி.மு.க. வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பட்டினப்பாக்கம் வீட்டில் இருந்து கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel