சென்னை
நாளை முதல் . மீன் பிடி தடைக்காலம் தொடக்குவ்தால் மீன்கள் விலை கடுமைஆ உயர்ந்ததால் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தமிழக கடல் மீன்படி ஒழங்குபடுத்தும் சட்டம் 1983-ன்படி, தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இம்மாதம் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவை படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது.
விசைப்படகுகள் மீன்பிடி தடைக் கால சீசன் நாளை (ஏப்ரல் 14, திங்கட்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் தொடங்குகிறது.எனவே சென்னை, நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஏற்கனவே சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டு வந்த வஞ்சிரம் மீன் இன்று ரூ.1,000-க்கும், ரூ.200 முதல் ரூ.300 வரை விற்கப்பட்ட சங்கரா மீன் இன்று கிலோ ரூ.600-க்கும், வவ்வால் மீன் இன்று கிலோ ரூ.650க்கும் விற்பனையாகிறது.
இந்த தடைக்காலத்தின் எதிரொலியாக இனி வரும் நாட்களில் மீன்கள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது TN