டெல்லி:
பிரபாஸ், தமனா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்து, ராஜமவுலியின் இயக்கத்தில் உருவான பிரமாண்ட திரைப்படம் பாகுபலி-2 இன்று திரைக்கு வந்தது.
இந்த திரைப்படம் கடந்த ஆண்டே வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு முழுமை பெறாமல் இருந்ததால் ரிலீஸ் தள்ளிபோனது.

இந்நிலையில் இன்று உலக முழுவதும் பாகுபலி-2 ரிலீசானது. இந்த படத்திற்கு ஆயிரகணக்கானோர் ஆன்லைன் மற்றும் நேரிலும் டிக்கெட் முன் பதிவு செய்திருந்தனர்.
முதல் நாளிலேயே பாகுபலி ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை எந்த இந்திய திரைப்படமும் முதல் நாளில் ரூ.100 கோடி வசூலான வரலாறு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel