பிரயாக்ராஜ்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா தற்போது நடை பெற்று வருகிறது. இந்த விழா உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெரும் விழாவையொட்டி உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்மத்தில் புனித நீராடி வருகின்றனர்..
நேற்று மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடியிருப்பில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
விபத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் மற்றும் யாருக்கும் காயம் உள்பட பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.