ஸ்ரீநகர்
அமர்நாத் யாத்திரை செல்லும் 400க்கும் மேற்பட்டவர்களிடம் போலி பதிவு சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இமயமலை தொடரில் இயற்கையாக உருவாகும் அமர்நாத் புலிங்கத்தைத் தரிசிக்க இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருவர். இந்த குகைக் கோவில் கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரத்து 800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆண்டு இங்குச் செல்வதற்கான யாத்திரை, ஜூலை 1-ந் தேதி தொடங்கி வரும் ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.
பக்தர்கள் அமர்நாத் கோவில் இணையதளம் மூலமாகவோ, அல்லது நேரடி பதிவு மையங்கள் மூலமாகவோ முன்பதிவு செய்து பதிவுச்சீட்டை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதி வுச்சீட்டுள் கத்துவா, சம்பா உள்ளிட்ட இடங்களில் சோதனைச் சாவடிகளில் பரிசோதனை செய்யப்படுகின்றன.
நேற்றைய தினம் சுமார் 430 யாத்திரிகர்கள் போலியான பதிவுச்சீட்டுகளை பெற்று வந்திருப்பது கண்டறியப்பட்டது. காவல்துறையினர் இது குறித்து நடத்திய விசாரணையில் டில்லியைச் சேர்ந்த ஒரு நபர் மற்றும் அவரது உதவியாளர்கள் 2 பேர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர். பிரிண்டர் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக பதிவுச்சீட்டை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]