சென்னை: தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதை விவாதிக்க மக்களவை தலைவர் மறுத்து வருகிறார்.
ஏற்கனவே மக்களவையில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். ஆனால் மக்களவையில் இந்த தீர்மான நோட்டீஸை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்க மறுத்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து மக்களவையில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. இன்றும் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதனால் அவை கூடியதும் தி.மு.க. எம்.பி.க்களின் கோரிக்கை ஏற்கப்படுமா? இல்லையா? என்பது தெரியவரும்.