சென்னை
வருமான வரித்துரை முன்னாள் அமச்சர் விஜயபாஸ்கர் வரும் 23 அன்று விசாரணைக்கு நேரில் வர உத்தரவிட்டுள்ளது/

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்து பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
பினாமி பெயரில் இந்த சொத்தை அவர் வாங்க முயன்றாரா? என சென்னை, உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நில உரிமையாளருக்கு இது குறித்து சம்மன் அனுப்பப்பட்டு அவர் சார்பில் ஒருவர் வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளார்.
பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், வருகிற 23-ந்தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் அல்லது அவருடைய வக்கீல் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக மீண்டும் வருமானவரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்த விசாரணைக்கு பிறகே வழக்கின் நிலை குறித்து விரிவாக கூற இயலும் என்று வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
[youtube-feed feed=1]