சென்னை: தமிழ்நாடு அரசு கட்டிட வளர்ச்சி விதிகள் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,   குடியிருப்பு, வணிக வளாகங்களில் இ வாகனங்களுக்கு சார்ஜிங் வசதி கட்டாயம் என கூறி உள்ளது.

தமிழ்நாட்டில் இனி புதியதாக கட்டப்படும் குடியிருப்புகள் மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த கட்டிட வளர்ச்சி விதிகளில் திருத்தங்கள் செய்து, குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என குறிப்பிட்டு தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த கட்டிட வளர்ச்சி விதிகளில் திருத்தங்கள் செய்து, குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என குறிப்பிட்டு தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், இ வாகனங்களுக்கு உகந்த சார்ஜிங் நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில், இ வாகனங்களுக்கான ஹப்கள், டிஜிட்டல் சார்ஜிங் மேப் போன்ற புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த கட்டிட வளர்ச்சி விதிகளில் திருத்தங்கள் செய்து, குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என குறிப்பிட்டு தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகளின்படி, எட்டு வீடுகளுக்கு மேலான அல்லது 750 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவில் கட்டப்படும் புதிய குடியிருப்புகளில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், 50 வீடுகளுக்கும் அதிகமான பெரிய குடியிருப்புகளாக இருந்தால், அங்கே வெளியில் இருந்து வருவோரும் பயன்படுத்தும் வகையில் பொதுவான ரீசார்ஜிங் வசதி ஏற்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதே போல, குடியிருப்புகளில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் வணிக வளாகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிலும் மின் வாகன சார்ஜிங் வசதியை ஏற்படுத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  இதன்படி, 300 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் ரீசார்ஜிங் வசதி கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த கட்டிட வளர்ச்சி விதி திருத்தங்கள், தமிழகத்தில் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், வாகன ஓட்டிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

மேலும், தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் மின் வாகனங்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.