பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இது சூர்யாவின் 40-வது படம். ‘எதற்கும் துணிந்தவன்’ என்று பெயரிட்டுள்ளது படக்குழு.

ப்ரியங்கா மோகன் இதில் நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர். நடிகை ராதிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைக்கிறார் . ரூபன் எடிட்டிங். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் படத்தில் இடம்பெற்றிருப்பதாக உலவும் செய்தி, படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்ததாக பாண்டிராஜ் தற்போது அறிவித்துள்ளார். அத்துடன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், நாயகன் சூர்யா மற்றும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். படம் குறித்த மேலும் அப்டேட்கள் விரைவில் வர இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.