சென்னை: தீபாவளியன்று (திங்கட்கிழமை)  ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை கோட்டம் ரயில்வே அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் வரும் 21ந்தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.  இதையொட்டி, அன்றைய தினமும், அடுத்த நாளும் தமிழ்நாட்டில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில்,  21ந்தேதேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை என்பதால் சென்னையில் அன்று ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு தினமும் 550 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை நாட்கள், தேசிய விடுமுறை நாட்களில் வழக்கமாக 40 சதவீத ரெயில்கள் குறைவாக இயக்கப்படும்

. அந்த வகையில், தீபாவளி பண்டிகையான வருகிற 20-ந்தேதி தேசிய விடுமுறை என்பதால் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சூலூர்பேட்டை, வேளச்சேரி என அனைத்து மின்சார ரெயில் வழித்தடங்களிலும் ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும். இதேபோல் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அனைத்தும் வருகிற 20-ந்தேதி ஒரு ஷிப்டு மட்டுமே இயங்கும். அதாவது காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.