சென்னை; வரும் 28ந்தேதி (அக்டோபர்) திமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்..
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. திமுகவும் ஏற்கனவே பட்டிதொட்டி எங்கும் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில், திமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் பயிற்சி கூட்டம் அளிப்பது பற்றி கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்வுப வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு தலைகுனியாது “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம்! – கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் திட்டமிடலின்படி வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை கழகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டை வளைத்திட முயற்சிக்கும் வஞ்சக சூழ்ச்சி கொண்ட ஒன்றிய பாஜக அரசின் முன்பு “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பரப்புரையை கழகம் தொடங்கவுள்ளது. அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற முன்னெடுப்புக்காக
கழக மாவட்ட செயலாளர்கள் – மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – தொகுதி பார்வையாளர்கள் – தலைமை செயற்குழு உறுப்பினர்கள் – ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக செயலாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம்” வரும் 28.10.2025 செவ்வாய்கிழமை, காலை 9.00 மணி அளவில் மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள “கான்ஃப்ளூயன்ஸ் ஹால்” (Confluence Hall)ல் நடைபெறும்.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் – மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – தொகுதி பார்வையாளர்கள் – தலைமை செயற்குழு உறுப்பினர்கள் – ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கூறி உள்ளார்.